Sunday 27 October 2013

அதிகாரி தகவல் கூடங்குளத்தில் 15 நாட்களில் 500 மெகாவாட் மின் உற்பத்தி...!

 கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 15 நாட்களில் 500 மெகாவாட் மின்சாரமாக உயர்த்த அணு மின் நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இந்தியா & ரஷ்ய கூட்டு முயற்சியுடன் யி13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த ஜூலை 13ம் தேதி இரவு அணுப்பிளவு தொடங்கியது. இந்த முடிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். எனினும் அணு உலையில் வெளிப்படும் வெப்ப ஆற்றல் நீராவி குழாய்கள் வழியாக செல்லும் வால்வுகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது.


 கடந்த 22ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் சோதனை முடிவுகளுக்காக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.  3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9.43 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இரவு 10.20 மணிக்கு மின்சார உற்பத்தி 200 மெகாவாட்டை எட்டியது. நேற்று சராசரியாக 200 முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில், “கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தியை படிப்படியாக அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த மின் உற்பத்தியை 15 நாட்கள¤ல் 500 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பல்வேறு ஆய¢வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்“ என்றார். டிசம்பர் இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment