Monday 28 October 2013

சிறப்பு முகாம்கள் முடிவடைந்தன வாக்காளர் பட்டியலில் சேர வரும் 31ம் தேதி கடைசி நாள்

 வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தது. 2014 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக் காளர் பட்டியல் (சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள்,



 வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர்  6, 20, மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் அதாவது, மாநிலம் முழுவதும் 60,418 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. மக்கள் ஆர்வமுடன் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். 

சில வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடம் மாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், படிவங் களை பெற்றவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து அளித்தனர்.

இந்த படிவங்கள் 31ம் தேதி வரை ஏற்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். வாக்கு சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை( கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி) ஆன்லைன் மூலம் 1,27,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போன்று வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், நேரடியாக சென்று பெயர் சேர்க்க 12,68,717 பேரும், பெயரை நீக்க 49,190 பேரும், திருத்தம் செய்ய 1,59,524 பேரும், தொகுதி விட்டு தொகுதி மாற 60,687 பேரும் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த படிவங்கள் வருகிற 31ம் தேதி வரை ஏற்கப்படும்.

அதன் பின்னர், விண்ணப்பங்கள் மீது அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வாக்குசாவடி நிலை அலுவலர் வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொள்வார். அதன் பின்னர், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். புதிதாக எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் இன்று அறிவிக்கப் படும்.  இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

No comments:

Post a Comment