Sunday 22 September 2013

பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொழிப் பாட தேர்வுகள் முடிந்து முக்கிய பாட தேர்வுகள் 18ம் தேதி தொடங்கி நடந்தன. அன்று முதல் மாணவ மாணவியருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. 18ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 5 பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் 6 வது பாடத்தில் இருந்தும் கேள்விகள் வந்தன. மொத்தம் 150க்கு 35 மதிப்பெண் களுக்கு இதுவரை நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ச்சியாக 20ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. இதுவரை நடத்தப்படாத 4 பாடங்களில் இ ரு ந் து 5 8 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அடுத்து நடந்த உயிரியல் தேர்வில் உயிரி தாவரவியல் பிரிவில் 75க்கு 29 மதிப்பெண் கேள்விகள் இதுவரை நடத்தப்படாத பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இவ்வாறு அடுத்தடுத்து குளறுபடிகளுடன் பிளஸ் 2 கேள்வித்தாள்கள் இடம் பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment