Sunday 22 September 2013

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கான போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லையில் நடந்தது. குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா தலைமை வகித்தார். டிஐஜி சுமித் சரண், எஸ்பிக்கள் விஜயேந்திரபிதரி, துரை, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா கூறியது: தமிழகத்திலுள்ள குற்றவாளிகள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி 30 மாவட்டங்களிலுள்ள சட்டம் , ஒழுங்கு காவல் நிலையங்களில் முடிந்துள்ளது. வரும் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சென்னை காவல் நிலையங்களில் இம்மாத கடைசியில் இப்பணிகள் நடக்க உள்ளன. தொடர்ந்து அக்டோபர் முதல் சிபிசிஐடி உள்ளிட்ட 20 பிரிவுகளிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துவங்கவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ10 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இமெயில் மூலம் புகார்களை விரைவாக தெரிவிக்கலாம். புகார்தாரர்களுக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படவுள்ளது. விரைவில் அதற்கான இணையதள முகவரி விபரங்கள் கொடுக் கப்படவுள்ளது. இதனால், எந்த ஒரு காவல் நிலையத்தில் இருந்து கொண்டும் மாவட்ட வாரியாக அன்று நடந்த குற்றங்கள், அவற்றின் பின்னணியை கம்ப்யூட்டர் மூலம் சில நிமிடங்களில் எளிதில் தெரிந்து கொண்டு மேற்கொண்டு குற்றங்கள் நடக்காமலும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment