Monday 23 September 2013

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் , தமிழ் பாட கேள்வித்தாளை , பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு , அபராதம் விதிப்பதுடன் , அந்த அச்சகத்தை , கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் , டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது. 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் , காலியாக உள்ள , 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப , கடந்த ஜூலையில் , டி.ஆர்.பி. , போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர் , தேர்வு எழுதினர். இதன் முடிவு , இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் , தமிழ் பாட கேள்வித்தாளில் , 52  கேள்விகளில் , எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும் , இதனால் , அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் , மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர் , ஐகோர்ட் , மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு , டி.ஆர்.பி. , க்கு , கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் , கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை , எனினும் , அந்த கேள்விகளை நீக்கிவிட்டு , மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு , மதிப்பெண் வழங்கலாம் ' என்ற , டி.ஆர்.பி. , யின் கருத்தை , கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ?, இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு ' என்று , கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான , அச்சகத்தின் மீது , டி.ஆர்.பி. , கடும் கோபத்தில் உள்ளது. 
இதுகுறித்து , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ் ' என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , " ஏ.பி.சி.டி. ,' என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , " பி ' வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , " பான்ட் ' கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில் ' தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , " கறுப்பு பட்டியலில் ' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment