Tuesday 22 October 2013

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தரமணி உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் நீண்டநேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனிடையே, இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் தென் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, தெற்கு ஆந்திராவுக்கும் - தமிழகத்திற்கும் இடையே நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள வானிலை மையம், ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment