Thursday 24 October 2013

செயற்கைகோள்கள் மூலம் இந்திய கடல் எல்லையை கண்காணிக்கிறது சீனா : பரபரப்பு தகவல்.!

இந்திய கடல் எல்லையை 19 அதிநவீன செயற்கைகோள்களின் உதவியுடன் சீனா கண்காணித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயலர் மற்றும் பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் அவினாஷ் சந்தர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். எனவே இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாம் நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த செயற்கைகோள்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




இதற்காக இந்தியா 80 முதல் 100 மிகவும் அதிநவீன செயற்கைகோள்களை உருவாக்கி கடல் எல்லையை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடலோர பாதுகாப்பில் மேற்கத்திய நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்திய கடல் எல்லையில் வானிலிருந்து ஆளில்லா சாதனம் மூலம் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு என நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். கடல் எல்லையில் கண்காணிப்பு குறித்து மணிக்கு மணி தகவல்கள் பெறும் வகையில் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவினாஷ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment