Tuesday 22 October 2013

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கியது!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இன்று அதிகாலை மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளத்தில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், காலை 5 மணியளவில் மின் உற்பத்தி 180 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இந்த மின் உற்பத்தியானது  படிப்படியாக உயர்த்தப்பட்டு 300 முதல் 400 மெகாவாட்டை எட்டியதும் மத்திய தொகுப்பில் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment